தனிநபருக்கு சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை கிடையாது!

Tuesday, July 19th, 2016

எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை இல்லை. யாழ் – பல்கலைக்கழக மோதல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

யாழ் – பல்கலைக்கழக மோதலில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது இடம்பெற்ற சிறிய மோதலை சிலர் பெரிதாக்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வெளியில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Related posts: