தனது நிறுவனத்தை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் இன்று பிதற்றுகிறார்!

Thursday, July 30th, 2020

தனது பத்திரிகையை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியே செய்தது என தனது பத்திரிகையில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறா என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் தெரிவித்தார்

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிரைகயாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தபோது  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது குற்றச்சாட்டுகள் இருந்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள்.?

தமிழ் மக்களை இராணுவம் கடத்தியது இராணுவம் சித்திரவதை செய்தது என ஐநாவரை சென்று கோசம்  போடும் கூட்டமைப்பினர் தற்போது தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கடத்தியது என கூறுகின்றனர் .

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழமையாக தேர்தல் நெருங்கும் நிலையில் எவ்வாறு செயற்படும் என்பதை மக்கள் நன்குணர்ந்த நிலையில் அவர்களுக்கு நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் நல்ல படிப்பினையைக் கற்றுக் கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், உடனடியாக தெரியப்படுத்துங்கள் – கல்விசார் ஊழியர்களுக்கு கல்வி அமைச்ச...
கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு - மின் பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை!
நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப...

மாற்று ஏற்பாடுகளின்றி மக்கள் வெளியேற்றம் : குருநகர் நீதிமன்ற குடியிருப்பு பகுதியில் பதற்றம்!
சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகா...
நாட்டில் 3 இலட்சம் சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர் - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்...