தடை நீக்கம் : அழைப்பினை மேற்கொள்ளுமாறு 119 அறிவிப்பு!
Sunday, January 8th, 2017நாளையதினம் பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளால் குறித்த தினத்தன்று வருகை தர முடியாதுள்ளமையினால் வழமை போன்று செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற குறைபாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை செயற்படாது என குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு!
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு...
இன்றும் 220 நிமிட நேர மின்வெட்டு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
|
|