இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மனம்!
Tuesday, December 22nd, 2020இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் ரத்மலானா விமான நிலையங்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையிலேயே நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இம்மாதம் 26 ஆம் திகதிமுதல் ஜனவரி 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டு!
கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு - மறு அறிவித்தல் வரை தபால் விநியோக சேவை நிறுத்தம் - தபால் மா அதிபர்...
தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் முறைப்பா...
|
|