தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு!

Monday, June 7th, 2021

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு தலா 25,ஆயிரம் டோஸ் வழங்கப்படும்.

மேலும் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு 50 ஆயிரம் டோஸ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தடுப்பூசி திட்டம் அரசியல் மயமாக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாட்டில் உள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்

Related posts: