தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, August 3rd, 2021

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக கொவிட் தடுப்பூசி அட்டையை தம்முடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும் என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் தடுப்பூசிகளை நிராகரிக்கும் மக்கள் எதிர்வரும் நாட்களில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பல்வேறு நிகழ்வுகளுக்கு செல்லும் போது கொவிட் தடுப்பூசி கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொவிட் தடுப்பூசிகளை நிராகரிக்கும் மக்கள் தொடர்பில் உரிய சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இதன் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்தி தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: