தெல்லிப்பளையில் 16 வயது பாடசாலை மாணவி துாக்கில் தொங்கி தற்கொலை !
Thursday, September 22nd, 2016
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது. மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவற்துறை கைப்பற்றியுள்ளது.

Related posts:
இலங்கை போக்குவரத்து சபையின் கடன்தொகை 16,000 மில்லியனாக அதிகரிப்பு!
இரு பிள்ளைகளின் தாய் உயிரிழந்த நிலையில் மீட்பு வட்டக்கச்சியில் சம்பவம்!
புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு - அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையு...
|
|
|


