தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும், மரணம் ஏற்படும் நிலையை பெருமளவு தடுக்கிறது – பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவிப்பு!
Thursday, August 26th, 2021கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது ட்ருவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
முக்கியமான நான்கு தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தனது ட்ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அவதானிக்கையில், சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8 மடங்கு அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத கொவிட் தொற்றாளர்களின் மரணமானது, சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களைவிடவும், 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
18 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கிடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு நிறைவு செய்யப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
000
Related posts:
|
|