டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பதிவாகும் வீதம் அதிகரிப்பு – உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், எச்சரிக்கை!
Thursday, January 12th, 2023
இலங்கையில், டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் தொற்றிய நோயாளர்கள், உரிய மருந்துவ பரிந்துரை இன்றி, மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போக்கு அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளதென்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இந்த நிலைமையும் ஒரு காரணமாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் உப தலைவர், தென்கொழும்பு போதனா வைத்தியசாலையின் உடலியல் நோய் விசேட வைத்தியர் நந்தன திக்மாதுகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நீர்க்கட்டண யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு!
நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான உத்தேச அங்கத்துவ பெயர்ப்பட்டியல் தயார்!
இலங்கையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளத...
|
|
|


