நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான உத்தேச அங்கத்துவ பெயர்ப்பட்டியல் தயார்! 

Monday, January 20th, 2020


நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் பரிந்துரைக்கப்பட்ட உத்தேச அங்கத்துவ பெயர்பட்டியல் பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இதற்கான அனுமதி பெறப்படவுள்ளது.

நாடாளுமன்ற பொதுமுயற்சியான்மைக்கான நிலையிற் குழு,அரச கணக்கு செயற்குழு உள்ளிட்ட செயற்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமித்தல் உள்ளிட்ட பாராளுமன்றத்தில் செயற்பாடுகள் குறித்த தெரிவுக்குழுவினூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்குமாறு கடந்த அமர்வின் போது, சபாநாயகர் கட்சி தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது, சபாநாயகரின் தலைமையில், கட்சி தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அடங்கலாக நாடாளுமன்றத்தினால் பெயரிடப்பட்ட 17 உறுப்பினர்களை கொண்டதாகும்.

சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன், ஜொன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகிய 9 பேர், நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

லக் ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியூதின்,சம்பிக்க ரணவக்க,மனோ கணேஷன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா, ஆகிய எதிர்கட்சி உறுப்பினர்களின் பெயர்களும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளன

Related posts: