டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் – டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!
Friday, May 15th, 2020நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் டெங்கு நோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என அதன் பணிப்பாளர், மருத்துவர் அநுர ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் டெங்கு நோயாளர்களுக்கு என அங்கு ஒரு பகுதி ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
5000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
ஒரு புத்திஜீவிகளின் தவறான ஆலோசனையே பி.சி.ஆர் பரிசோதனைகள் தாமதமடைய கரணமானது - அரச மருத்துவ அதிகாரிகள்...
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
|
|