டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Friday, June 29th, 2018நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 518 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 23 டெங்கு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 176 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்படும் போது உடனடியாக வைத்தியரை நாடுமாறு மருத்துவத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் காய்ச்சல் ஏற்படுகின்றவர்கள் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பாடசாலைகள் அல்லது வேலைத்தளங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை !
குருதிப் புற்றுநோய் - சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழப்பு!
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வசதி - அமைச்சரவையும் இணக்கம்!
|
|