கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் – அரச வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, July 26th, 2021

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா திரிபானது அடுத்துவரும் மாதங்களில், நாட்டில் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் ஒன்றுகூடும் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 50 க்கும் 60 க்கும் இடையில் மட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் இல்லையெனின், பொருத்தமான வகையில் தற்போதைய எண்ணிக்கையை விட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும் எனவும் அரச வைத்தியர்கள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா ...
நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வெற்றுக்கொடுக்க விரைவான ...
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...