டெங்கு நுளம்பற்ற பாடசாலைக்கான நடவடிக்கையை முன்னெடுங்கள் பாடசாலை சமூகத்திற்கு கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்!

Thursday, April 4th, 2019

டெங்கு நுளம்பற்ற பாடசாலை சுற்றாடல்களை முன்னெடுப்பதற்காக புதிய பாடசாலை தவணை நிறைவடைவதற்கு முன்னரும் 2 ஆம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாடசாலை சுற்றாடல் பகுதிகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக 2019 ஆம் ஆண்டு முதலாவது பாடசாலை தவணை நிறைவடைவதற்கு முன்னரும் 2 ஆம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னரும் டெங்கு ஒழிப்பு வேலைதிட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தொரடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இம்மாதம் 5 ஆம் திகதி பாடசாலை முதலாம் தவணை முடிவதற்கு முன்னரும் 2 ஆம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னரும் டெங்கு குடும்பி மற்றும் நுளம்புகள் அற்ற பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களின் பங்களிப்புடனும் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளோட்டோரின் ஒத்துழைப்பை பெற்று பாடசாலை சுற்றாடல் பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள சுற்றடல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts: