டெங்கு – கொரோனா நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானவை – மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பணிப்பாளர் கோரிக்கை!

Thursday, June 17th, 2021

டெங்கு மற்றும் கொவிட் நோய்கள் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளை  வெளிப்படுத்தக் கூடியவை என தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் நோய் அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறும், தேவையற்ற மருந்துகளை பயன்படுத்தாமல் நோய் அறிகுறிகள் தென்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே வைத்தியர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், சீரற்ற வானிலையால் எதிர்வரும் சில வாரங்களில் நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய்க்கான சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் வீடு மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதும் மக்களின் பொறுப்பு என வைத்திய நிபுணர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: