தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவியுங்கள்!

Monday, July 25th, 2016

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் பல்வேறுபட்ட திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 071 859 2020 அல்லது 071 859 2022 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொண்டு தகவல்களை தனக்கு நேரடியாக அறிவிக்க முடியும் என பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: