டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம் – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவிப்பு!
Sunday, June 5th, 2022
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
000
Related posts:
இலங்கை வந்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
அரியாலை இளைஞன் படுகொலை - ஆதாரங்கள் மீட்பு!
தரமற்ற கல்வி முறை - ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கிய இலங்கை மருத்துவ சபை!
|
|
|


