டிஜிட்டெல் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு!
Wednesday, July 12th, 2017கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் கர்ப்பிணித் தாய்மாரின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக 20 ஆயிரம் ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப் பெறும்.
இந்தத் திட்டம் மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக பெற வேண்டியிருந்தது. எனவே, அதனை இலகுபடுத்துமுகமாக கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரசியலமைப்பு பேரவையை இரத்து செய்யுங்கள் - அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் விஜயதாச ராஜபக்ஷ
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றதா ? - நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணய...
தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் ப...
|
|