டிசம்பர் முதலாம் திகதிமுதல் துபாயில் இருந்து கொழும்புக்கு மேலதிக விமானங்கள் சேவையில்!

Thursday, November 24th, 2022

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதிமுதல் டுபாய் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையில் மேலதிக விமான சேவைகளை இயக்க தீர்மானித்துள்ளது.

விமான டிக்கெட்டுகளுக்கான தேவையை கவனத்தில் கொண்டு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: