டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்!

Monday, December 14th, 2020

இலங்கை கிரிக்கெட்டில் தனித்துவமான பெயரை நிலைநாட்டிய சனத் ஜயசூரிய அவர்களின் தந்தையின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.

டன்ஸ்டன் ஜயசூரிய அவர்கள் தனது 80ஆவது வயதில் காலமானார். மாத்தறையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய கௌரவ பிரதமர், சனத் ஜயசூரிய உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டமை குறிப்படித்தக்கது.

Related posts: