ஜுலை முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Wednesday, April 4th, 2018

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் தனியார் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய உள்நாட்டு வரிச் சட்டம் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் என அனைத்தினதும்விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சங்கம் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைவாக கட்டண உயர்வு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!
புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகின்றோம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப...
சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ...