ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் – நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் விசேட அவதானம்!
Sunday, July 24th, 2022ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் வழமை போன்று கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல - கத்தோலிக அமைப்பு!
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்...
|
|