தேர்தல் ஆணையாளர் – சபாநாயகர் அவசர கோரிக்கை!
Saturday, February 17th, 2018
தேவையேற்பட்டால் சில உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவ எல்லை தொடர்பில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய , சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் சபாநாயகரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் , எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு சபைக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய அறிக்கையொன்றை அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் இதன்போது தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடமராட்சி கிழக்கில் தே.அ.அட்டை வழங்குவதற்கான துரித செயற்பாடுகள்!
மழையுடனான நிலைமை தொடரும் – வானிலை அவதான நிலையம்!
இந்து - லங்கா ஒன்றிணைந்த ஆணைக்குழுவை மீண்டும் கூட்டுவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருட்ன அமைச்சர் ப...
|
|