ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் – தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!

Monday, April 2nd, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக செய்திள் வெளியாகியுள்ளன.
இதன்போது , பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் , ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
இதேவேளை , இந்த சந்திப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: