இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் விடுதலை
Friday, June 23rd, 2017பாகிஸ்தானில் வைத்து கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இப்ராகிம் கலில் மற்றும் ஒபிய்துல்லா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போனமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்இ ஏழுவர் உயிரிழந்ததோடு ஏழு இலங்கை வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் நிதியுதவி!
மிக கொடிய விஷத்தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையில் உற்பத்தி - அமைச்சர் பி.ஹரிசன்!
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்பட...
|
|