ஜனா­தி­ப­தி­யுடன் யாழ்.பல்கலை மாண­வர்கள் இன்று  சந்­திப்பு.!

Tuesday, November 1st, 2016

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்களின் படு­கொலை விவகாரம் தொடர்பில் பல்­க­லைக்­க­ழக சமூகத்தினர் இன்று ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஆகி­யோரை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கையில் இந்த சந்­திப்பு இன்று நண்­பகல் 12.30 மணி­ய­ளவில்  நடை­பெ­ற­வுள்­ளது.

இரண்டு யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததையடுத்து மாண­வர்கள்

வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வந்­தனர். இதனால்  பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நடவ­டிக்­கைகள் முற்றாக  ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­தன.  இந்த நிலையில் பல்­க­லைக்­க­ழக  துணைவேந்தர் திரு­மதி வசந்தி அரசரட்ணத்தின் அழைப்பின் பேரில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி. எம். சுவா­மி­நாதன் நேற்று முற்­பகல் பல்கலைக்கழகத்­திற்கு  விஜயம் செய்து மாணவர் சங்க  பிரதி நிதி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.  இந்தப் பேச்சுவார்த்­தையின் போதே  ஜனா­தி­பதி தலைமை­யி­லான குழு­வி­னரை  சந்­திப்­ப­தற்­கான இணக்கம்  எட்டப்பட்டுள்ளது.

 பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நேற்று காலை முதல் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிர­தா­ன­வா­யிலை மூடி நிர்­வாக முடக்கல் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  மாண­வர்­களின் படு­கொ­லைக்கு உரிய நீதி வழங்கக் கோரி அவர்கள் நேற்­றுக்­காலை இந்தப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர். பல்­க­லைக்­க­ழக வளாகத்திற்குள் ஒன்­று­கூ­டிய  மாண­வர்கள் பிர­தான வாயிலை  மூடி­ய­துடன் எவ­ரையும் உள்நுழைவ­தற்கு அனு­ம­திக்­க­வில்லை.

இந்த நிலையில் பல்­லைக்­க­ழக துணை­வேந்தர்  வசந்தி அர­ச­ரட்ணம் மற்றும் பீடா­தி­ப­திகள், விரிவுரை­யா­ளர்கள் பல்கலைக்­க­ழ­கத்­திற்கு வருகை தந்த போதிலும் உள்ளே செல்­வ­தற்கு அவர்களை மாண­வர்கள் அனு­ம­திக்­க­வில்லை. இதனால் மாண­வர்­க­ளுக்கும்  துணைவேந்தருக்குமி­டையில்  வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது.  மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன்  சந்­திப்­பிற்கு வரு­கை­த­ர­வுள்­ள­தா­கவும், இதனால் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்கு­மாறும்  துணை­வேந்தர் உட்­பட பீடா­தி­ப­திகள்  மாண­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தனர்.

இத­னை­ய­டுத்து துணை­வேந்தர் உட்­பட பீடா­தி­ப­திகள்  விரி­வு­ரை­யா­ளர்­களை உள்­செல்ல  மாணவர்கள் அனுமதித்தனர்.

 இத­னையத் தொடர்ந்து அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன்  பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு வருகை தந்தார்.  அவரை அவ­ரது வாக­னத்தில் செல்­வ­தற்கு அனு­ம­திக்­காத மாண­வர்கள்  பல்­க­லைக்­க­ழக வளாகத்திற்குள் நடந்து செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கினர்.  இத­னை­ய­டுத்து  துணை­வேந்தர் திரு­மதி வசந்தி அரச ரட்ணம் தலை­மையில் அமைச்சர்  சுவாமிநாதனுட­னான கூட்டம்  இடம்­பெற்­றது.  இதில்  மாணவ சங்­கங்­களின் தலை­வர்கள்  விரி­வு­ரை­யா­ளர்­களும் பங்கேற்­றி­ருந்­தனர்.

 மாண­வர்கள் துப்­பாக்­கிச்­சூட்டில் உயி­ரி­ழந்த சம்­ப­வங்­க­ளுக்கு உரிய நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும்.  அது­வரை  எமது போராட்­டத்தை நாம் கைவி­டப்­போ­வ­தில்லை.  உயி­ரி­ழந்த மாண­வர்­களின் குடும்பங்­க­ளுக்கு அர­சாங்­க­மா­னது உரிய உத­வி­களை வழங்­க­வேண்டும்.  கொல்­லப்­பட்ட மாணவர்களின் குடும்­பங்­க­ளுக்கு  உரிய நட்­ட­ஈடு வழங்கப்படவேண்டும்.  அந்தக் குடும்­பங்­களின் தொழி­லற்­றுள்ள  சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்கு வேலை­வா­யப்­புக்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று மாணவ சங்கத் தலை­வர்கள் அமைச்­ச­ரிடம் கோரி­யுள்­ளனர்.  இத­னை­விட ஜனாதிபதியை சந்­தித்து இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வேண்­டு­மென்றும் அவர்கள் வலி­யு­றுத்­தினர்.

இத­னை­ய­டுத்தே  இன்­றைய தினம் ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க,  நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகி­யோரை பல்கலைக்கழக சமூகம்  சந்­தித்து பேசுவது என்று  தீர்­மா­னிக்­கப்­பட்­டது. பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் திரு­மதி வசந்தி அர­ச­ரட்ணம், மற்றும்  இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள், மாணவர் சங்­கங்­களின் தலை­வர்கள் ஆகியோர்  ஜனாதிபதி தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்தித்து­பே­சு­வது என்று முடிவு எடுக்­கப்­பட்­டது.

அமைச்சர் சுவா­மி­நா­த­னு­ட­னான சந்­திப்பின் போது மாண­வர்கள் பலி­யா­தன சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு குறு­கிய காலத்­திற்குள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் மாணவ சங்கப் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.  இந்த சந்­திப்பில் ஜனாதிபதியை சந்­தித்து பேசு­வ­தற்­கான இணக்­கப்­பாடு எட்டப்பட்­ட­தை­ய­டுத்து  பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமது  நிர்­வாக முடக்கப் போராட்­டத்தை  கைவி­டு­வ­தற்கு இணங்­கி­யுள்­ளனர்.

இந்தப் பேச்­சு­வார்த்தை குறித்து அமைச்சர் சுவா­மி­நாதன் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரிவிக்கையில்

இந்த சந்­திப்பின் போது யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவ பிர­தி­நி­திகள் மாண­வர்­க­ளு­டைய கோரிக்கையை என்­னிடம் சமர்ப்­பித்­துள்­ளார்கள். யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளு­டைய நீதிவேண்டி கால­வ­ரை­ய­றை­யற்று தொடர்ந்த பல்கலைக்­க­ழக பகிஸ்­க­ரிப்புப் போராட்டம் முடிவுறுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் இன்று மதியம் 12.30 மணியளவில் கொழும்பில் ஜனாதிபதி­யுடன் சந்­திப்பை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

இச் சந்­திப்பில் யாழ்.பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் மற்றும் மாணவப் பிர­தி­நி­தி­களும் பங்கு கொள்வார்கள் அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் சந்­திப்பில் கலந்து கொள்­வார்.யாழ். பல்க­லைக்­க­ழக மாணவர் இருவர் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் மற்றும் அதன் பின்­ன­ரான சூழல் தொடர்­பா­கவே இக் கலந்­து­ரை­யாடல் அமையும் என  தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதி நள்­ளி­ரவு கொக்­குவில் – குளப்­பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் மரணத்துக்கு நீதி வேண்டி மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முடக்கும் வகையில் அனைத்துப் பீடங்களின் கல்வி சார் நடவடிக்கைகளையும் பகிஷ்கரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர்  சுவாமி நாதனுடனான பேச்சுவார்த்தையை அடுத்து பகிஷ்கரிப்பு போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளமையினால் இன்று பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

University-of-Jaffna

Related posts: