இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!

Tuesday, January 4th, 2022

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவின் அசோக் லேலண்ட் மூலம் குறித்த பேருந்துகள் கொள்வனவு  செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: