சைட்டம் கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்த முடிவு!

Friday, April 21st, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.எதிர்வரும் சில வாரங்களில் அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த இந்த நடவடிக்கை இடம்பெற கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: