செப்டம்பர் 14 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தை – அரச நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Tuesday, September 12th, 2023இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மறுஆய்வு குறித்து இலங்கை அதிகாரிகள் செப்டம்பர் 14 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.
இதனை அரச நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு 2023 செப்டம்பர் 14 மற்றும் 27 க்கு இடையில் கொழும்புக்கு விஜயம் செய்கிறது.
முன்னதாக 2023 மார்ச் மாதத்தில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியது. இந்தநிலையிலேயே தற்போது முதல் ஆய்வு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையின் எண்ணிக்கை 167ஆக உயர்வு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் - நீதி அமைச்சர் விஜ...
|
|