ஜே.வி.பி அரசுக்கு எச்சரிக்கை!

Wednesday, October 4th, 2017

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை தராவிடின் நாடு முழுவதிலும் தொழிற்சங்கங்களது ஆதரவுடன் பாரிய போராட்டங்களை செய்யவுள்ளதாக ஜே.வி.பி அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நிலையில் ஜே.வி.பி இதனை வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஜுன் 7 இற்குப் பின்னர் பயணத்தடையை நீடிப்பது குறித்து மீளாய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும - பிரதி ச...
யாழ் மாவட்டத்திலும் அச்சுறுத்தல் - மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் - வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்...
கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ...