செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்றுத்தரப்படும் என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!
Friday, January 29th, 2021வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரனின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் பிரதேச சபையின் முன்றலில் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் மக்களது விருப்புகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது போராட்டத்திலீடுபட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனிடம் அரசியல் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்து ஆலோசித்து சாதகமான ஒரு தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் போராட்டகாரருக்கு உறுதியளித்த நாபடாளுமன்ற உறுப்பினர் திலீபன் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
|
|