இலங்கை விமானப்படைக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பியூலன்ஸ்!
Tuesday, June 20th, 2017ஜப்பான் – இலங்கை நட்புறவு மன்றத்தினால் நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் மற்றும் தீயணைப்பு இயந்திரம் என்பன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் இலங்கை நட்புறவு மன்ற தலைவர் கலாநிதி லால் திலகரத்ன மற்றும் திருமதி எரங்கா திலகரத்ன ஆகியோரால் அவற்றுக்குரிய ஆவணங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் வேண்டுகோளுக்கமைய இலங்கை விமானப்படைக்காக 450 இலட்சம் பெறுமதியான தீயணைப்பு இயந்திரம் மற்றும் 350 இலட்சம் பெறுமதியான நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் ஆகியவை கையளிக்கப்பட்டுள்ளது.
Related posts:
152 வருடங்களின் பின்னர் இலங்கை வான் பரப்பில் அபூர்வ நிலவு! யாழில் தோன்றிய அழகிய காட்சி
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பம் - கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு...
அலுவலக பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்!
|
|