சுற்றுலா வலயங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க ஜனாதிபதியிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் கோரிக்கை!
Wednesday, February 23rd, 2022
நாடளாவிய ரீதியாக வலயங்கள் அடிப்படையில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற நிலையில் சுற்றுலா வலயங்களை அதிலிருந்து விடுவிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தநிலையில் மின் துண்டிப்பு சுற்றுலாத்துறையைப் பாதிக்கும் எனச் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பல மணிநேர போராட்டத்திற்கு பின் எவர் கிரீன் கப்பல் மீட்டெடுப்பு!
நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் - நகர அபிவிருத்தி அதிகா...
கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர...
|
|
|


