சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, August 23rd, 2020

குருநாகல் மற்றும் ஏனைய பகுதியில் உள்ள அனைத்து வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அறிவுறுத்தல்களை சுற்றுலா அமைச்சருக்கு வழங்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறு மற்றும் பெரு போகம் ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் வடமேல் மாகாணத்தில் 12,500 ஹெக்டேயர் விவசாய நிலங்களை வளப்படுத்தும் வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

குருநாகல், மொரகொல்லாகம, சியம்பலன்கமுவவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமு...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...
காஷ்மிர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து - இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது என ப...