சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
Tuesday, August 24th, 2021
சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுப்பதற்கு அந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்..
அத்துடன் அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சூழலியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் இதற்காக பெறப்படவுள்ளன.
பல்வேறு காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மாற்றம்பெற்ற போதிலும், சுற்றாடல் பாதுகாப்பிற்கான கொள்கைத் திட்டங்கள் மாற்றப்படவில்லை என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உடனடி உதவிகள் வழங்கிவைப்பு!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது - இலங்கை மத்திய ...
|
|
|


