சுபகிருது புத்தாண்டு மலர்ந்தது – புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை!

Thursday, April 14th, 2022

உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரையின் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் சுபகிருது என்ற பெயரை கொண்டு, இந்த புதுவருடம் மலர்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50க்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41க்கு பிறந்தது.

இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும்.

கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல் 8.47 வரையும், நாளை (15) காலை 7.52 முதல் 9.51 வரையும், திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று(14) காலை 8.50 முதல் 9.42 வரையும், நாளை (15) காலை 8.35 முதல் 9.50 வரையும் சுபநேரம் காணப்படுகிறது.

இதேவேளை இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்

வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள்,நகை,மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையில்

இம்முறை நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதன் காரணமாக மற்றும் ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: