அடுத்த மாதம் நடுப்பகுதிமுதல் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மீண்டும் முன்னெடுக்ப நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, October 12th, 2021

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் விமான சேவைகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முடக்கப்படுவதற்கு முன்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட்டன.

எனவே கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராயுமாறு விமான நிறுவனங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய நிலைமை காரணமாக தடைபட்டுள்ள யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தியிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: