சுன்னாகம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
Tuesday, September 20th, 2016சுன்னாகத்தில் அமைந்துள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து வருட கால டிப்ளொமா கற்கைநெறியைத் தாம் தொடர்கின்ற போதிலும், தமக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.கடந்த 46 நாட்களாக வகுப்புப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவந்த லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கல்லூரியில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டினர்.அத்துடன், தமது பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதுடன், சுன்னாகம் அனல் மின் நிலையத்தை ஒட்டியதாக கல்லூரி அமைந்துள்ளதால், மூலிகைச் செடிகளைப் பயிரிட முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
Related posts:
இலங்கை விவசாய நாடாக கட்டியெழுப்பப்படுகின்றது - பைசர் முஸ்தபா!
விஜயகலாவின் புலிக்கதையால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!
விசேட வைத்தியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வு - அரசாங்கத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோ...
|
|