அனைத்து வீதிகளும் முடக்கம் – மீறினால் கடும் தண்டனை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Friday, August 13th, 2021

மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்குவழிப் பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசியமற்ற எந்தவொரு பயணத்தையும் மாகாணங்களுக்கிடையில் மேற்கொள்ள வேண்டாம்.

மாகாணங்களுக்குள் உட்புகும் பிரதான மற்றும் குறுக்கு வழிகள் அனைத்து முடக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிப்படுத்தல் சட்டத்தைமீறி எவரும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பெறப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: