சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உதவுறு கோரிக்கை விடுக்கிறது தேர்தல் ஆணையம்!
Monday, January 16th, 2023சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கு உதவுமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், நாட்டின் குடிமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற பங்குதாரர்களை தேசிய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.
வேட்புமனுக்கள் கோரப்படும் திகதிக்கு முன்னதாகவே தேர்தலை சீர்குலைக்க பல்வேறு தரப்பினர் பல குறிப்பிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த சம்பவங்களில் சில அமைச்சர்களின் தேர்தல் தொடர்பில் பொய்யான அறிக்கைகள், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் மற்றும் அறிக்கைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான தகவல்கள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய பின்னணியில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|