சுதந்திரக் கிண்ண 2 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி!
Friday, March 9th, 2018சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரின் இந்தியா ௲ பங்களாதேஷ் மோதிய இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 6 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஷிகார் தவான் 55 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
Related posts:
ரயில்வே திணைக்களத்தின் இடைக்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் - ரயில்வே பொது முகாமையாளர்!
எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிப்பு!
பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம் - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா
|
|