சுகாதார அமைச்சின் எச்சரிக்கை!

Monday, September 19th, 2016

கர்ப்பிணி தாய்மார்கள் சீகா வைரஸ் பரவும் நாடுகளுக்கு செல்வது பாதுகாப்பானதல்ல என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி சிங்கப்புர், மலேசியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் சீகா வைரஸ் வேகமாக பரவிவருவதால் குறித்த நாடுகளுக்கு செல்வது மிகவும் ஆபத்தானது என சுகாதார சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் நோய் நிலை தொடர்பில் ஆராய்வதற்கு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

zikapregnancydeet

Related posts: