சீன அரசாங்கத்தின் பங்களிப்பில் 9 மாடி கட்டிடம்!

Saturday, April 8th, 2017

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள 9 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டியுள்ளார்

இலங்கையின் பிரதான மருத்துவமனையும், ஆசியாவின் விசாலமான மருத்துவமனையுமான கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் நிலவிவரும் அதிக நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி சுகாதார அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் சீன அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது செயற்படுத்தப்படும் வெளிநோயாளர் பிரிவிற்கு பதிலாக இந்த முழுமையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகளை மூன்றரை வருட காலத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசிய குழுத் தலைவர் யு சென்ஷான் . பேசாக்கு மற்றும் சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Related posts: