சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Friday, July 30th, 2021

சிறுவர்கள் மீதான பல்வேறு துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவற்றில் 73 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பானவை என அதிகார சபையின் தலைவர் முதித் விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார். அத்துன் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி ஓய்வு பெற்றுள்ளதால், அந்த பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதவி வெற்றிடத்திற்கு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித் விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: