சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு – சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன எச்சரிக்கை!
Friday, March 10th, 2023இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன குறிப்பிட்டுள்ளார்.
விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கின் அம்பாறை பகுதிகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
குப்பிளானில் திருட்டு முயற்சி முறியடிப்பு!
வெளிவிவகார தொடர்புகளை வலுப்படுத்த இலங்கை - ரஷ்ய பேச்சுவார்த்தை!
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!
|
|