தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!
Tuesday, January 26th, 2021
தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதியை பிரதேச செயலாளரிடம் பெற்றுக் கொள்வதை அத்தியாவசியமாக்கி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது
இது தொடர்பான சட்டமூலம், சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் வீடொன்றை நிர்மாணிக்கும்போது அங்கு காணப்படும் தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதி வழங்கப்படவுள்ளது.
எனினும், தேவையற்ற விதத்தில் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்படாது என தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான சட்டமூலம், நாடாளுமன்ற அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழை 25ற்கு முன் சமர்ப்பிக்கவும்!
நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் - வ...
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 13 முதல் 15 ஆம் திகதிவரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை - மாவட்ட பதி...
|
|
|


