சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021

சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 500 கிராமங்களை “சௌபாக்கியா உற்பத்தி கிராமங்களாக” அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நுவரெலியா மந்தாரம்நுவர போஞ்சி விதை மற்றும் கோப்பி உற்பத்தி கிராமம், பேராதனை உடுஈரியகொல்ல மலர் உற்பத்தி கிராமம் மற்றும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரான்பட்டிருப்பு நல்லெண்ணெய் உற்பத்தி கிராமம் என்பன “சௌபாக்கியா உற்பத்தி கிராமம்” என பெயரிடப்பட்டு அதற்கான டிஜிட்டல் நினைவு பலகைகள் பிரதமரின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டன.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நமது நாட்டின் சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் இம்மக்களுக்காக ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு பொறுப்பை நிறைவேற்றுவது என்பது குறித்து சிந்தித்தோம்.

கொடுப்பனவுகளை வழங்கி இம்மக்களை ஒரே இடத்தில் இருப்பதை மாற்ற வேண்டும் என நாம் விரும்பினோம். சௌபாக்கிய சமுர்த்தி வாரம் அதற்கான மற்றுமொரு வாய்ப்பாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்திற்கு தற்போது 27 ஆண்டுகளாகின்றன. வறுமை கோட்டிலுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கிலேயே சமுர்த்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அன்று நாம் எதிர்பார்த்த பலன் எமக்கு கிடைத்துள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சமுர்த்தி திட்டத்தின் ஊடாக அன்று கொடுப்பனவுகளை பெற்றவர்கள் இன்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு இருப்பார்களாயின் நமது எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதே அதன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் மாத்திரம் யாரும் செல்வந்தராக முடியாது. அவர்களுக்கு சரியான வருமான மார்க்கத்தை உருவாக்கிக் கொடுத்து உரிய முறையில் வழிகாட்ட வேண்டும். அதனை உணர்ந்து அன்று நாம் மஹிந்த சிந்தனை ஊடாக சமுர்த்தி திட்டத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.

சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் தொழிற்பயிற்சி திட்டங்களுக்கு வழிநடத்தி திறமையான பணியாளர்களாக உருவாக்கினோம். அதன் மூலம் பல தொழில்முனைவோர்களை உருவாக்க எம்மால் முடிந்தது என்று நாம் நம்புகின்றோம்.

அதுமாத்திரமன்றி அவர்களை அரச மற்றும் தனியார் துறையில் மாத்திரம் அல்லாமல் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பில் ஈடுபடுத்த முடிந்தது. அதன் மூலம் பலரை நன்கொடை மற்றும் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கும் நிலையிலிருந்து மீட்க முடிந்தது.

சுபீட்சத்தின் நோக்கில் செயற்திறனான குடிமகன் போன்றே மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் எனும் எண்ணக்கருவை முன்னோக்கி நகர்த்தியுள்ளோம். இதனூடாக முழுமையான வதிவிட பொருளாதாரத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்திலும் அம்மக்களை வளப்படுத்துவதே எமது நோக்கமாகும்.

ஆனால் கடந்த அரசாங்கத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் திரும்பிக்கூடப் பார்க்கப்படவில்லை. அனைத்தும் அவர்களது கட்சியினருக்கு மாத்திரமே என இப்பாரிய திட்டம் மிகவும் குறுகிய இடத்தில் குவிந்திருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

மக்களை மேம்படுத்தாது அவர்களை அவ்விடத்திலேயே முடங்கச்செய்து அரசியல் இலாபம் தேடுவதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக காணப்பட்டது. நாம் ஒருபோதும் அவ்வாறானதொரு நிலைக்கு தள்ளப்படவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சமுர்த்திக்காக நாம் ஆண்டிற்கு 50 ஆயிரம் மில்லியன் ரூபாயை செலவிடுகிறோம். சமுர்த்தி பயனாளர் குடும்பங்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் இதுவரை பல புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம்.

அதற்கமைய வீட்டு உற்பத்திகளை மேம்படுத்தவும், அவர்களது வருமானத்தை அதிகரிக்க செய்யவும் இன்று ஆரம்பிக்கப்படும் இந்த சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வேலைத்திட்டத்தினூடாக முடியும் என நாம் நம்புகின்றோம்.

Related posts: