இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!

Saturday, November 24th, 2018

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இழப்புகள் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்தில் இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக நிசா புயல் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு கூட இதுவரை உரிய இழப்பீடு பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்;லை.

அதேபோன்றே இழப்பீடு தருவதற்கென ஒவ்வொரு அழிவுகளின்போதும் பிரதேச உத்தியோகத்தர்களால் சேத விபரம் திரட்டப்படுகின்றது. ஆனால் இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை.

இதுதொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் எடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts: