சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள்!

Monday, April 5th, 2021

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதிமுதல் விசேட தொடருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு கோட்டை – பதுளை விசேட தொடருந்து சேவை இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதுடன். பதுளை – கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி விசேட தொடருந்து சேவைகள் 09, 10, 11, 12,17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் இந்த விசேட தொடருந்து சேவை 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.50 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். அத்துடன் மேற்படி விசேட தொடருந்து சேவை 12, 15, 17, 19, 21 ஆகிய தினங்களில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் – குருணாகல் விசேட தொடருந்து சேவை இரவு 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாவதுடன், இந்த விசேட தொடருந்து சேவை 12 ஆம் திகதி மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மார்ச் முதல் வாரத்தில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் - ...
அரிசி, பச்சைப்பயறு, பீன்ஸ், கௌபீ, பட்டாணி நிலக்கடலை போன்றவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லை - விவசாய...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் - சீன வி...