சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் இலங்கை விஜயம்!

Monday, January 22nd, 2018

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(22) இலங்கை வருகிறார்.

இலங்கையில் அவர், மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டதலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்த ஊடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமருடனான சந்திப்பின் போது இருநாட்டு வர்த்தக பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: